districts

img

மருந்தாளுநர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், டிச.31 - இயக்குநர்கள் பரிந்துரையின்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு மருந்தாளுநர்களுக்கு அரசு பணி  வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் இருக்கிற 1500-க்கும் மேற்பட்ட காலிப் பணியி டங்களை பட்டய மருந்தாளுநர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.   மக்களின் நலன் கருதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்தாளுநர்கள் மூல மாக மருந்துகளை மக்களுக்கு வழங்கு வதை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பா ட்டம் தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் கூட்டமைப்பின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க த்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரபிரபு தலைமை வகித்தார்.