புதுக்கோட்டை, பிப்.21- நாளொன்றுக்கு 4 மணி நேரத் தில் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான நலச்சங்கத்தின் சார்பில் அன்னவாசல், மணமேல் குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலு வலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலை வர் எம்.சி.லோகநாதன் தலைமை வகித்தார். மணமேல்குடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் எம்.தங்கவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.சேகர், எம்.மரியசெல்வம், லெட்சுமணன், திருநாவுக்கரசு, ராதிகா உள்ளிட்ட ஏராளமான மாற் றுத்திறனாளிகள் பங்கேற்றனர். பின்னர் அந்தந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கோரி க்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.