தஞ்சாவூர், ஏப்.21-
தஞ்சாவூர் மாவட்டம் திருவேதுகுடி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 180 மனுக்களை பொதுமக்கள் ஆட்சிய ரிடம் அளித்தனர்.
வருவாய் துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு விலை யில்லா வீட்டு மனைப் பட்டா, 35 பயனாளிகளுக்கு பட்டா மாறு தல், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 பயனாளி களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகைக்கான ஆணை, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 120 பயனாளிகள் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு விவசாய பயன்பாட்டு பொருட்கள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2 பய னாளிகளுக்கு தொழில் முனைவோர் திட்டத்திற்கான காசோலை, ஊரக வளர்ச்சி துறை சார்பில் 19 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 330 பயனாளி களுக்கு ரூ.51,11,047 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.