districts

img

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பங்குகளை விற்க எதிர்ப்பு

திருச்சிராப்பசுள்ளி, டிச.2- யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனங்களின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வ தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் கூட்டுக் குழு சார்பில் திருச்சிராப்பள்ளியில் மனித சங்கிலி நடைபெற்றது.   யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க மாவட்டத் தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். நியூ இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கச் செயலாளர் நீலகண்டன், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மண்டல இணைச் செயலாளர் ராஜ மகேந்தி ரன், தலைவர் ராஜன், மாவட்டச் செயலாளர் முத்துக்குமரன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் அகில இந்திய சங்க செயலாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;