தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது: 32 பவுன் நகை மீட்பு அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வர்களில் ஒருவர், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 32 பவுன் நகைகளை காவல்துறையினர் மீட்டனர். செந்துறை அடுத்த குழுமூர், பெரியாக்குறிச்சி, இலுப்பை யூர் மற்றும் குவாகம் அருகே யுள்ள இருங்களாகுறிச்சி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை விரைந்து பிடிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வ ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பா ளர் ரகுபதி மேற்பார்வையில், தளவாய் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது, மேற்கண்ட கிராமங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(34), அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்த மேற்கண்ட கிராமங்களில் வீடு புகுந்து 53 பவுன் நகைகள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரிஷிவந்தியம் சென்ற செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலை மையிலான காவல் துறையினர், அங்கு மறைந்திருந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து,சிறையில் அடைத்தனர்.மேலும் அவரிடமிருந்து 32 பவுன் நகைகளையும் காவல் துறையினர் மீட்டனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வரு கின்றனர்.