அரியலூர், ஜூலை 30-
அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 25 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கில் 75 சதவீத சாதனை அடையும் வகையில் அரியலூர் மாவட்டத் தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண் ணெய்ப் பனை கன்று நடவு விழா ஜூலை 25 முதல் ஆக.5 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
எண்ணெய்ப் பனை பயிரானது நட்ட மூன்று ஆண்டுகளில் மகசூல் தரவல்லது. எண்ணெய் பனை நட களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதிமிக்க பகுதி ஏற்றதா கும். ஒரு ஹெக்டேருக்கு 20 இல் இருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலை கள் அறுவடை செய்யப்படுகின்றன.
அவற்றை அரசு நிர்ணயிதத குறைந்த பட்ச ஆதார விலையாக டன்னுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை அரசு அங்கீகாரம் பெற்ற கோதெரஜ் என்ற நிறுவனம் கொள்முதல் செய்வதால் விவ சாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிர மம் ஏற்படாது.
தற்போது நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப் படம் இரண்டு, வயல் வரைபடம் மற்றும் ஆதார் அட்டைநகல் ஆகிய ஆவணங்களு டன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தும், உழவன் செயலி மூலம் பதிந்தும் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநரை (நடவுப் பொருள்) 97151-67612 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.