பாபநாசம், மார்ச் 19 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில், புதிய பேருந்து நிலை யம், ரயில்வே ஸ்டேசன் அமைந்துள்ளன. புதிய பேருந்து நிலையத்திற்கு விரைவுப் பேருந்துகள் வராத நிலையில், சில நகரப் பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. மேலும், பேருந்தின் நுழைவுப் பகுதியில் சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள், உணவகங்கள் இருப்பதால், வாகனங்களில் வருவோர், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இந்த நெரிசலுடன், சாலையின் நடுவே தடுப்பு இருப்பதும் இடையூறாக உள்ளது. எனவே போக்குவரத்திற்கு இடை யூறாக உள்ள தடுப்பை அகற்றுவதுடன், சாலையோரம் கயிறு பதித்து, வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.