திருச்சிராப்பள்ளி, ஆக,29 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்திற்கு வரப் பெற்றுள்ள 9 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வியாழன் அன்று நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சென்னையில் பருவ மழையை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பல் துறைகள் அடங்கிய ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. தற்போது மீண்டும் ஒரு ஆலோச னைக் கூட்டம் நடைபெறஉள்ளது. சென்னை மாநகரத்தை பொ றுத்தவரை, அறிவிக்கப்பட்ட பணிகளில், 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டன. சென்னை மட்டுமல்லாது, திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சி பகுதியிலும் முழு மையாக கழிவுநீர் வாய்க்கால்க ளை தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்து வருகிறோம். இதற்கான நிதியை எங்களது துறை நிதியிலிருந்து பயன்படுத்திக் கொள்கிறோம். சென்னையை பொறுத்தவரை, சராசரியாக, 20 முதல், 25 சென்டி மீட்டர் வரை மழை பெய்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதற்கு மேல் மழை பெய்தால் எதிர்கொள்வது சற்று சிரமம் தான். திருச்சி மாநகரப் பகுதி விரிவடையும்போது அருகில் உள்ள கிராமப் பகுதிகள் பாதாள சாக்கடை ,குடிநீர் உள்ளிட்ட வசதி கள் பெற முடியாமல் இருந்தன எனவே, அருகில் உள்ள கிராம பஞ்சாயத்துகளையும் திருச்சி மாந கராட்சி உடன் இணைத்து விரி வாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிலையில் விருப்பமில்லாத கிராம பஞ்சாயத்துகள் மாநக ராட்சி உடன் இணைய தேவை யில்லை. அவர்கள் நாங்கள் இணையவில்லை என்று எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் அவர்களை நாங்கள் இணைக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.