districts

img

என்.சி.சி. துப்பாக்கி சுடும் போட்டியில் அரசுக் கல்லூரி மாணவி சிறப்பிடம் சிபிஎம் மாநாட்டில் கௌரவிப்பு

கும்பகோணம், செப்.21-  தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் துப்பாக்கி சுடும் போட்டியில் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவி சிறப்பிடம் பெற்றார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அரசினர் கலைக் கல்லூரியில் இயற்பியல் இளநிலை இரண்டாமா ண்டு பயிலும் மாணவி வி. சந்தனேஸ் வரி மதுரை மாவட்டம் இடையபட்டி யில் 30 நாள்கள் நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அங்கு, மாநில துப்பாக்கி சுடும் போட்டிக்குத் தகுதி பெற்றார். தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை பாராட்டும் வகையில்  கும்பகோணம் சிபிஎம் நகர 24 ஆவது மாநாட்டில் கும்பகோ ணம் அரசினர் கல்லூரி மாணவி சந்தேனேஸ்வரியை பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரிவிக்கப்பட்டது.   நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா ளர் சின்னை பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், தமிழ்ச் செல்வி, மாநகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியினர் பாராட்டினர்.