districts

img

அரசு கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா

கும்பகோணம், ஏப்.29-

   கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா கல்லூரி முதல்வர் நா. தனராஜன் தலைமையில் நடைபெற்றது.  

   தமிழ்த்துறை தலைவர்  செ.காளி முத்து வரவேற்றார். திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண் டார்.  

   விழாவில் கல்லூரியின் வேதியி யல் துறைத்தலைவர் மா.மீனாட்சிசுந்த ரம், இயற்பியல் துறைத்தலைவர் இரா.ச.சுந்தரராஜன், நூலகர் ரா.சங்கர லிங்கம், நிதியாளர், கண்காணிப்பாளர் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.