districts

img

முள்ளிப்பாடி ஊராட்சி: நூறுநாள் பணியை ஆய்வு செய்ய வேண்டும்

பொன்னமராவதி, செப்.15 - அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியத்தில் போராட்டம் நடை பெற்றது. மேலத்தானியம் சந்தைபொட்டலில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைத் தலைவர் முருகேசன் தலைமை வகித் தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கர், மாவட்டத் தலைவர் சலோமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ரு தீன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ராமசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட  குழு உறுப்பினர் நல்லதம்பி, வாலி பர் சங்க பொறுப்பாளர் குமார், விவசா யிகள் சங்க ஒன்றியச் செயலாளர் பாண்டியன், ஒன்றிய தலைவர் பழனி யப்பன், மாதர் சங்கம் லதா ஆகி யோர் பங்கேற்றனர். முள்ளிப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் ஏழை மக்களை வறுமைக் கோட்டு பட்டியலில் முறையாக சேர்க்க  வேண்டும். வெளியூரில் வசிப்பவர்கள்  முள்ளிப்பாடி ஊராட்சியின் நூறுநாள்  வேலையை பார்ப்பதாக கூறி, மோசடி யாக ஊதியம் வழங்கப்படுகிறது. இதை கண்டித்தும், நூறுநாள் பணிகள்  குறித்து முள்ளிப்பாடியில் ஆய்வும் நடத்த வேண்டும். ஸ்ரீஅழகர் பெருமாள்  கோவில் முன்பு பயன்படாமல் இருக்கும் அடிபம்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னர்.  மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்.29 அன்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போ ராட்டம் நடத்தப்படும் என தெரிவித் துள்ளனர்.