districts

திருச்சி முக்கிய செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர், அக்.13-  தஞ்சாவூர் வட்டம் கூடலூர் வெண்ணாற்றங்கரையில் மழைநீர் இருப்பினை நேரில் பார்வையிட்டு, வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.  பின்னர், வடவாற்றங்கரையோரம் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்து சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். மழைக்காலத்தில் ஆற்றின்  கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம்  அறிவுறுத்தினார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா,  வட்டாட்சியர்கள் அருள்ராஜ் (தஞ்சாவூர்), சிவக்குமார் (பேரிடர் மேலாண்மைத் துறை) உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை

பாபநாசம், அக்.13 -  தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொ)  சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர்  மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகளை முழுவீச்சில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.   தற்போது தஞ்சைக்கு சரக்கு ரயிலில் 1300 மெ.டன்  டிஏபி உரம் வந்துள்ளது. இதன்பின்னர், லாரிகளில் ஏற்றப் பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலை யங்களுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பயிர்களுக்கு தேவை யான உரங்களான யூரியா 10747 மெ.டன், டிஏபி  2593 மெ.டன், பொட்டாஷ் 1693 மெ.டன், காம்ப்ளக்ஸ் 3664 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 982 மெ.டன் உள்ளிட் டவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்  மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்க ளிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப் பாடின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறப் பட்டுள்ளது.

அதிகரிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

பாபநாசம், அக்.12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் இதன் சுற்று  வட்டாரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. இதனால் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ள னர்.  தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், சாலைகளில்  செல்லும் இரு சக்கர வாகனங்கள், கார்களில் செல்ப வர்களை துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். பிரதான சாலைகளில் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள் கின்றன. இதனால் சாலைகளில் நடந்து செல்பவர்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகளால் தெருக்க ளில் விளையாட முடியவில்லை. தனியாகச் செல்லும் குழந்தைகளை நாய்கள் துரத்துகின்றன. பழக்கமான தெருக்களில்கூட பணி முடித்து வீடு திரும்புபவர்களால், இரவில் வீட்டிற்குச்  செல்ல முடிய வில்லை. இரவு நேரங்களில் சைக்கிளிலோ, நடந்தோ  செல்ல முடியாத நிலை உள்ளது. பிரதான சாலைகளில் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிகின்றன. பிற பகுதிக ளிலிருந்து, நாய்கள் இங்கு கொண்டு வந்து விடப்படு கிறதா என்ற அளவிற்கு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்த படி உள்ளது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த  வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  

நெல்லை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டுக்கு பணம் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி

திருநெல்வேலி, அக்.13- திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் புதிதாக வருமான  அடிப்படையில் தரம்  உயர்த்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது  ரயில் நிலையத்தின் மேம் பாட்டு பணிகளை சமீபத்தில் தென்னக ரயில்வே பொது மேலா ளர் நேரடியாக வருகை தந்து மதுரை கோட்ட மேலாளர் உடன்  ஆய்வு செய்து பணிகள் அனைத் தையும் முடுக்கிவிட்டு சென்றார்.  இதனிடையே இரண்டு நாட்க ளுக்கு முன்பிருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்கும்போது பணம் வாங்க மறுப்பதாகவும், க்யூ ஆர் கோடு மூலம் ஆன்லைனிலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி பயணச்சீட்டுக்கு உரிய பணத்தை செலுத்துமாறு ஊழி யர்கள் கூறுவதாகவும் பொது மக்க ளிடம் இருந்து புகார்கள் எழுந்து உள்ளன. இதனால், ரயில்வே கவுண்டரில் கால நேரம் விரயம் ஆகிறது, மேலும் ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் கைபேசி இல்லாத சாதா ரண பாமர மக்கள் பயணச்சீட்டு எடுக்க வரும்போது சக பயணி களின் உதவியை கோர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது  அனைத்து வகையான பய ணச்சீட்டுகளை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் எடுக்க வரும் பயணிகளிடம் திடீ ரென ரயில்வே உத்தரவுப்படி பணம் வாங்க மாட்டோம் ஆன்லை னிலேயே பணத்தை செலுத்துங் கள் என தெரிவித்திருப்பது பொது  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இவ்வாறாக ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்  வசதி முழுமையாக அமல்படுத்த ப்பட்டால் ரயில்வே டிக்கெட் கவுண் டர்களை மூட வேண்டிய சூழ்நிலை விரைவில் நிரந்தரமாக ஏற்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் லேப்டாப் அல்லது மொபைல் மூலமாக ரயில்வே டிக்கெட்டுகளை பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வும் பொது நல ஆர்வலர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, அக்.13 - வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக் கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 30.9.2024 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்த, முறை யாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு (+2), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற  பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடைய வர் ஆவர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்த வரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2024 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி  உடையவர் ஆவர்.  ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர்  40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை பெறு பவர்களாயின், அவர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதி யில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவ னத்திலும் பயிலுபவராக இருக்கக் கூடாது.  இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர் களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவ லக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல்  குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில்  வந்து, விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப் பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம். விண் ணப்பதாரர் அரசு துறை, தனியார் துறை யிலும் எவ்வித ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயதொழில் வேலைவாய்ப்பில் ஈடு பட்டவராகவோ இருத்தல் கூடாது.  ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித் தொகை பெற்றவர் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை என  தெரிவிக்கப்படுகிறது என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்து உள்ளார்.

சம்பா சாகுபடியில் பயிர் காப்பீடு  செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூர், அக்.13-  தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்குமாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூர் I-க்கு ஷீமா (KSHEMA) பொதுக் காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் 1ல் தஞ்சாவூர் (பூதலூர் மற்றும் கண்டியூர் பிர்கா தவிர), ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் அம்மாபேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் பிர்கா தவிர) ஆகிய வட்டாரங்கள் இதில் அடங்கும். தஞ்சாவூர் II-க்கு அக்ரிகல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி  (AICL) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் II-ல், தஞ்சாவூர் வட்டாரத்தில் பூதலூர் பிர்காவில் உள்ள சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, மருதக்குடி, ராயந்தூர் கிராமங்கள் மற்றும் கண்டியூர் பிர்காவில் உள்ள அரசூர் சின்ன அவுசாகிப் தோட்டம், மனக்கரம்பை, நாகத்தி, ராஜேந்திரம், செங்களுநீர் தோட்டம் மற்றும் தென்பெரம்பூர் ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும்.  நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.548 பிரிமீயத்தொகையை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்யும்போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்தபின் அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும்.  தாமதமின்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

விஜயதசமி: பள்ளியில் மாணவர் சேர்க்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.13- ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பள்ளியின் முதல்வர்  ராணி வரவேற்றார். பள்ளியில் சேர்ந்த மாணவ - மாணவி யர்களை முதல் எழுத்தான அகர எழுத்தை நெல்மணிகள்  மூலம் பள்ளியின் ஆசிரியர்கள் எழுத வைத்தனர். தாளா ளர் ஜி.எஸ். முருகேசன் மற்றும் பெற்றோர்கள்,  ஆசிரியைகள் புதிய மாணவர்களை வாழ்த்தினர்.

தமிழ்நாட்டிற்கு குறைந்தளவு நிதி ஒதுக்கீடு: ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், அக்.13 - மனிதநேய மக்கள் கட்சியின் தலை வரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் உள்ள மாநிலங் களுக்கு நிதிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக ரூ.89,086 கோடியை ஒன்றிய அரசு விடு வித்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிர தேசத்திற்கு ரூ.31,962 கோடியும், பீகார் மாநிலத்திற்கு ரூ.17,921 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.13,987, மேற்குவங்க மாநிலத்திற்கு ரூ.13,404 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோ டியை மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி  இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா,  தெலுங்கானா, கேரளா, கர்நாடகா  ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு   வழங்கப்பட்டு உள்ள ஒட்டு மொத்த நிதி  ரூ.28,152 கோடிதான். இதைவிட உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு மட்டும்  கொடுக்கப்பட்டுள்ள நிதி அதிகம்.  ஏற்கனவே கல்விக்கு வழங்க வேண்டிய தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.  இந்த மாத ஊதியத்தை வழங்க இயலாமல், தமிழ்நாடு அரசு 10 நாட்கள் தாமத மாக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை  விடுவித்தது. தொடர்ந்து தமிழ்நாட் டிற்கு வழங்க வேண்டிய தொகை களை வழங்காமலும், மிகக் குறைந்த அளவில் நிதிகளை ஒதுக்கீடு செய்வதும்  தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.  ஜிஎஸ்டி வரி மூலம், மிக அதிக வரு வாயை வழங்கும் தமிழ்நாட்டிற்கு மிகக்  குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்து, நிதி கூட்டாட்சியைச் சிதைக்கும் ஒன்றிய  அரசை மனிதநேய மக்கள் கட்சியின்  சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர்  குறைப்பு தின ஊர்வலம்

பாபநாசம், அக்.13 - தேசிய பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் ஊர்வலம் நடந்தது.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் அருகில் தொடங்கிய ஊர்வலம், தாலுகா அலுவலக சாலை  வழியாக வந்து, பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் நிறை வடைந்தது.  இதில் பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணைத் தாசில்தார் பிரபு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் செல்வராணி, ஆர்.ஐ.க்கள் அய்யம்பேட்டை அனிதா, மெலட்டூர் கணேஷ் குமார், சாலியமங்கலம் கமலி,  அம்மாப்பேட்டை மாலினி, கிராம நிர்வாக அலுவலர்கள்,  தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) முருகானந்தம் உட்பட  தீயணைப்பு நிலைய வீரர்கள், காவல்துறையினர் பங்கேற்றனர்.

அக்.16-இல் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்  அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு

திருச்சிராப்பள்ளி, அக்.13 - காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலையில் 1800 பேர் வேலை பார்க்கின்றனர். 15 ஆண்டு காலமாக இயங்கும் ஆலையில் 11 மணிநேர வேலை, சுகாதார வசதி இல்லாதது, ஏதேனும் நலத்திட்டங்களை கேட்கும் தொழிலாளர்களை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வது என்ற நிலை இருப்பதாக கூறி, தொழிலாளர்கள் 1500 பேர் சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைந்து, கடந்த 35 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அவர்களுடைய கோரிக்கையான, சங்கம் அமைக்கும் உரிமை, தொழிற்சங்கத்தோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக அரசையும், சாம்சங் நிறுவனத்தையும் வலியுறுத்தி அக்.16 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டுக் குழு அறிவித்தது. இந்நிலையில் இந்த போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மிளகுப் பாறையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், ஏஐசிசிடியு அருண், ஐஎன்டியுசி வெங்கட், எச்எம்எஸ் ஜான்சன், எல்எல்எப் தெய்வீகன், எல்டியுசி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  திருச்சியில் அக்.16 அன்று தென்னூர் அரசமரத்தடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் பெருந்திரளாக கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.