districts

img

கல்வியுடன் விளையாட்டுத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

அரியலூர், செப்.1- மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டுத்  திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் சட்டப் பேரவை உறுப்பினர் கு. சின்னப்பா. அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கி அவர் மேலும் பேசியதாவது: மாணவர்கள் விளையாட்டிலும், கல்வி யிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற் காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து  அறிவித்து வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதன் ஒரு பகுதியாக மாண வர்கள் விளையாட்டிற்காக அதிக நிதியும் ஒதுக்கியுள்ளார். எனவே மாணவர்கள், தங்க ளது முழு திறமைகளையும் வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். மாணவிகளும் தங்களது தனித் திறன்களை வளர்த்துக் கொண்டு, விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் என்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தன் தலைமை வகித்தார். நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் சுடர்  தீபத்தை ஏற்றி வைத்தார். மாவட்ட விளை யாட்டு அலுவலர் லெனின், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன், பள்ளி துணை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசி ரியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர்.