புதுக்கோட்டை, ஜன.18 - ஏழை, எளிய மக்களுக்காக சட்ட மன்றத்தில் குரல் கொடுத்து முன்மாதிரி யான சட்டமன்ற உறுப்பினராக எம்.சின்னத்துரை செயல்படுகிறார் எனப் பாராட்டடினார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தாலிக்கு தங்கத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர். இதில் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசு கையில், ஏழை, எளிய மக்களின் சிரமங் களை உணர்ந்து முதலமைச்சர் இத்திட் டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழர் கலாச்சாரத்தின் மீதும், தமிழர்களின் பாரம்பரியத்தின் மீதும் அக்கறை கொண் டவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி யேற்றும் வகையில் கலைஞரால் 1989 இல் மகளிர் திருமண உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ கத்தை அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் முதலமைச்சர் செயல்படு கிறார். அதனடிப்படையில் செவ்வா யன்று 30 பயனாளிகளுக்கு திருமண நிதி யுதவியுடன் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ., எம்.சின்னத்துரை பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்றவர். இந்தத் தொகுதி மக்களின் சிரமங்களை நன்கு உணர்ந்தவர். சட்டப்பேரவை விவாதங்க ளில் சிறப்பான முறையில் பங்கேற்று வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொ டரில் இத்தொகுதி ஏழை, எளிய மக்க ளின் குரலாக எதிரொலித்து அரசின் கவ னத்தை ஈர்க்கின்ற வகையில் அவரது உரை அமைந்தது மிகவும் பாராட்டுக்குரியது. தொகுதி மக்களின் பிரச்சனைகள் மட்டுமல்லாது மாநிலத் தில் உள்ள ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களின் குரலாகவும் சட்டமன்றத்தில் அவர் குரல் ஒலிக்கிறது எனப் பாராட்டி னார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை), டாக்டர் வை. முத்துராஜா (புதுக்கோட்டை) முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்ல பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவ லர் மா.செல்வி, ஒன்றியக் குழுத் தலை வர் கே.ஆர்.என்.போஸ், மாவட்ட சமூக நல அலுவலர் கே.என்.கோகுலப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.