districts

img

அதிகளவில் மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும்

புதுக்கோட்டை, டிச.13- அதிகமான மாணவர்களை விஞ்ஞானி களாக உருவாக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். புதுக்கோட்டையில் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற பயிற்சித் திட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசியது: ஆசிரியர்களிடமிருந்து மாண வர்கள் கற்றுக் கொள்கிறார்களா, மாண வர்களிடமிருந்து ஆசிரியர்கள் கற்றுக் கொள்கிறார்களா என்ற நிலை இருக்கிறது. அந்தளவுக்கு கிராமப்புற மாணவர்களும் அறிவுத்திறனுடன் இருக்கிறார்கள்.  இந்த நிலையில்தான் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு மாண வர்களையும் சர்.சி.வி. ராமன்களாக உரு வாக்க வேண்டும். அதிக மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும். நமது கண்டுபிடிப்புகளுக்கு காப்பு ரிமை பெறும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சீன நாட்டிலிருந்து ஆண்டுக்கு 43 ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு காப்பு ரிமை பெறப்படுகிறது. ஆனால், நம் நாட்டி லிருந்து ஆண்டுக்கு 2 ஆயிரம் காப்புரிமை கள்தான் பதிவு செய்யப்படுகிறது. காப்பு ரிமை பெறும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மணற்கேணி என்ற செயலி தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. அந்தச் செயலிக்கு அறிவுசார் பங்களிப்பைச் செய்ய எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.  விழாவில், ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.என்.ஹரிஹரன், பைப் ஸ்டார் நிதி நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் ஸ்ரீகாந்த் கோபால கிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா.மஞ்சுளா, கவிஞர் தங்கம் மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக சூழலியல் துறை இயக்குநர் ஆர்.ரெங்கலட்சுமி வரவேற்றார். முதன்மை விஞ் ஞானி ஆர்.ராஜ்குமார் நன்றி கூறினார்.