பெரம்பலூர், பிப்.28- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் என். செல்லத்துரை தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அலி உரையாற்றினார். பால் உற்பத்தியா ளர்களுக்கு தழமிழக அரசு 1 லிட்டர் பாலுக்கு ஊக்கத்தொகை ரூ.3 வீதம், தமிழகம் முழுவதும் வழங்க வேண்டிய ரூ.100 கோடியை பால் சொசைட்டி மூலமாக உடனே வழங்கிட வேண்டும். ஆவின் நிர்வாகமே பால் பணத்தை ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். பால் லிட்டர் 1-க்கு ரூ.10 விலை உயர்வு அளிக்க வேண்டும். மாட்டுத் தீவனத்தை 50% மானியத்தில் வழங்கிடவும், இலவச மாட்டுக் கொட்டகை திட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்தாவிட்டால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என மாநிலத் தலைவர் முகமது அலி தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், பால் உற்பத்தியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.