பொன்னமராவதி, பிப்.8- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியி்ல் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமிற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்லநாகு மற்றும் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பழனியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 12 அன்று, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.