புதுக்கோட்டை, ஆக.21- கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன் கொடுமைசெய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண் டித்து மாதர், மாணவர், வாலிபர் சங்கத்தின் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார். மாதர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி, மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகா தேவி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி, வாலிபர் சங்க நகர் தலைவர் தீபக், செயலாளர் நித்திகுமார் மற்றும் நிர்வாகிகள் காயத்ரி, வசந்தகுமார், ராமு, முத்துமாரி உள்ளிட்டோர் பேசினர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண் டித்தும், தஞ்சாவூர் மாவட்டம் ஒர்த்தநாட்டில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்ப வத்தைக் கண்டித்தும், குற்றவாளி களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பட்டன.