தஞ்சாவூர், அக்.4 - தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சாவூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றா வது சர்வதேச பொது சுகாதார மாநாட்டை தொ டங்கி வைத்த அவர் பின்னர் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 72 என உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 55 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓராண்டுக் குள் 55 லிருந்து 46 ஆகக் குறைந்துள்ளது. நிகழாண்டுதான் ஒரே ஆண்டில் 9 ஆகக் குறைந்திருக்கிறது. இது, இந்திய அளவில் மகத்தான சாதனையாக உள்ளது. தமிழ்நாட்டில் முழுமையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டங்களாக விழுப்புர மும், விருதுநகரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னேறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 5 சுகப் பிரசவம் நடைபெற்று உள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை மிகச் சிறப்பாக இருப்பதற்கு இதுவே ஒரு உதாரணம். மயிலாடுதுறையில் ஒரே ஊசியை பல ருக்கும் பயன்படுத்தியது தொடர்பான வீடியோ காட்சி மூலம் கண்டறிந்து, தொடர்பு டைய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளர்களாக 1,066 பேர், கிராம சுகாதார செவிலியர்களாக 2,253 பேர், மருத்துவர்களாக 2,550 பேரை பணி நியமனம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. எம்.ஆர்.பி. சார்பில் மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,066 பணியிடங்கள் உள்ள நிலையில், உயர் நீதி மன்றத்தில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிராம சுகாதார செவிலியர் பணியி டங்களுக்கும் 30-க்கும் அதிகமான வழக்கு கள் தொடுக்கப்பட்டுள்ளன. வழக்கு தொடுப் பதன் மூலம் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, வழக்கு தொடுப்பவர்கள் எங்களிடத்தில் வந்தால், பேசி சுமூகத் தீர்வு காணப்படும். சென்னை எழும்பூரில் உள்ளது போன்று குழந்தைகளுக்கான மருத்துவமனையை தஞ்சாவூரில் ஒன்றும் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினர் ச. முர சொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மேயர்கள் சண்.ராம நாதன் (தஞ்சாவூர்), க.சரவணன் (கும்ப கோணம்), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் தி.சி. செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர் ப. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, புதிய பேருந்து நிலையத் திலிருந்து மேல வஸ்தாசாவடி ரவுண்டானா வரை பேரணி நடைபெற்றது. இந்த மாநாடு தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
காரையூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 5 சுகப் பிரசவங்கள்
பொன்னமராவதி, அக்.4 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்டோபர் 1 அன்று மட்டும் 5 சுகப் பிரசவங்கள் நடைபெற்று உள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் அருள் மணி நாகராஜன் தலைமையிலான மருத்து வக் குழுவினர் மற்றும் செவிலியர்கள், அனைத்து தாய்மார்களையும் பார்வையிட்டு குழந்தைகள் நலப் பெட்டகம் வழங்கினர். அப்போது, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் காரையூரிலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினார். மேலும் இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை வசதிகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மருத்துவக் குழுவினரை புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ராம் கணேஷ் பாராட்டினார்.
தஞ்சாவூரில் வியாழனன்று தொடங்கிய சர்வதேச பொது சுகாதார மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.