districts

img

பெருந்திரள் முறையீடு -ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ,21-  திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தலைமை ஆய்வு நுட்புனர் பதவி உயர்வு வழங்க வேண்டும், புதிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில், வியாழன் அன்று திருச்சி மாவட்ட தலைவர் ரோஸ்லின் தலைமையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராஜா, வீரமணி, மாவட்ட இணை செயலாளர்கள் லட்சுமணன், சாமுண்டீஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வனிதா, தேவராஜ், திருச்சி மாவட்டச் செயலாளர் அனந்த லெட்சுமி ஆகியோர் பேசினர். ஆய்வக நுட்புனர் சங்க மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி சிறப்புரையாற்றினர்.  அரசு ஊழியர் மாவட்டத் தலைவர் பால் பாண்டி, மாவட்டச் செயலாளர் நவநீதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறை வுரை ஆற்றினார். முடிவில் சங்க திருச்சி  மாவட்டப் பொருளாளர் முகமது அபுதா ஹிர் நன்றி கூறினார். பெருந்திரள் முறை யீட்டு ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆய்வக நுட்புனர்கள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.