கும்பகோணம், ஜூலை 17-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினர்கள் குடும்பமாக சங்கமித்த குடும்ப விழா மற்றும் கட்சி நிதியளிப்பு விழா கும்பகோணத் தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் குழந்தைகளின் ஆடல், பாடல், விளையாட்டுப் போட்டிகள், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி யை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர் சங்க மாநில பொதுச் செயலாளர் களப்பிரன் மற்றும் கும்ப கோணம் தீக்கதிர் செய்தியாளர் சர வணன் தொகுத்து வழங்கினர்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் வசூல் செய்யப் பட்ட கட்சி நிதி ரூ.2 லட்சத்து 25 ஆயி ரம், கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகியிடம் கும்பகோணம் மாநகர குழு சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக போட்டிகளில் வென்ற வர்களுக்கு மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகி பரிசுகளை வழங்கி னார்.