தஞ்சாவூர், ஆக.18-
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம் பாடு புத்தாக்க நிறுவ னம், பாரதிதாசன் பல்கலைக் கழக மையம் சார்பாக, தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் மருதுபாண்டியர் கல்லூரி யில் நடைபெற்றது.
மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். கல் லூரி முதல்வர் முனைவர் மா. விஜயா, துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ், புலத்தலைவர் ஆராய்ச்சி முனைவர் கோ.அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.
சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக் கழக தொழில்நுட்ப பூங்கா இயக்குநர் முனைவர் எம்.பாலமுருகன், பாரதிதாசன் பல்கலைக்கழக மைய, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கள ஒருங்கிணைப் பாளர் ஆர்.அமர்நாத், உயி ரியல் விஞ்ஞானி முனைவர் ஞானபிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கின் மூலம் 200- க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயனடைந்தனர்.