தியாகி என்.வெங்கடாசலம் நினைவு தின பொதுக்கூட்டம்
தஞ்சாவூர், செப்.23- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் இராய முண்டான்பட்டியில் தியாகி என்.வி. நினைவுத் திடலில், மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 46 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் கே.ரமணி, ஆர்.மனோஜ், வி. சந்தோஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செய லாளர்கள் சி.பாஸ்கர், கே.அபிமன்னன், ஏ.ராஜா, எம். ரமேஷ், எம்.வடிவேலன், எஸ்.வியாகுலதாஸ் முன்னிலை வகித்தனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றி னார். கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, இராயமுண்டான்பட்டியில் தியாகி என்.வி. நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. இதேபோல், செங்கிப்பட்டி, பூதலூர், மனையேரிப் பட்டி, சுரக்குடி மற்றும் பல்வேறு இடங்களில் தியாகி என்.வி. நினைவு தினத்தை முன்னிட்டு கொடியேற்றியும், உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதையும் செலுத்தப் பட்டது.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
பாபநாசம், செப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஜெய்நகரைச் சேர்ந்த வர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சுந்தர்ராமன். இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். வெள்ளி யன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில், பீரோ, கட்டில் உள்ளிட் டவை உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. இதில் அவர் வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருடு போயிருந்தன. இதுகுறித்து சுந்தர்ராமன் பாபநாசம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாபநாசம் டி.எஸ்.பி. பூரணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திறனாய்வுச் செம்மல் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
தஞ்சாவூர், செப்.23- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ந.சுப்பு ரெட்டியார்-100 கல்வி அறக்கட்டளை “திறனாய்வுச் செம்மல் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக பதிவா ளர்(பொ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “பேராசிரி யரும் தமிழறிஞருமான ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக்கட்டளை சார்பாக 2023 ஆம் ஆண்டுக்கான திற னாய்வுச் செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்மொழி, இலக்கியம், தமிழியல் ஆய்வுகளில் ஈடு பட்டு அரும்பணியாற்றுவோரைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும். 2023 ஆம் ஆண்டிற்கான விருது, 2021-22 ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூக மேம் பாட்டிற்குப் பங்களிப்பு செய்த ஆய்வுகளைச் செய்தோர், உரிய நூல்கள், தன் விவரக்குறிப்புடன் விண்ணப்பிக்க லாம். தகுதி உடையோரைப் பிறரும் பரிந்துரை செய்ய லாம். விருதுக்குத் தனியொரு நூலோ, ஒட்டுமொத்தப் பங்க ளிப்போ கவனத்தில் கொள்ளப் பெறும். விண்ணப்பங் கள், பரிந்துரைகளை 3.10.2023-க்குள் ந.சுப்புரெட்டியார் - திறனாய்வுச் செம்மல் விருது, பதிவாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் - 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு உயரிய தேசிய தரச்சான்று
திருச்சிராப்பள்ளி, செப்.23 - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு உயரிய தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது என அக்கல்லூரியின் தலைவர் மற்றும் முதல்வர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அக்கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கல்லூரி தலைவர் டி.சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் டி.பால்தயாபரன் ஆகியோர் கூறியதாவது: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தரமான உயர் கல்வியை வழங்குவதற்கான தேடலில் ஒரு குறிப்பிட்ட மைல்கல்லை எட்டியுள்ளது. தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனமான நாக் (என்ஏஏசி) அமைப்பு, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு 4 ஆவது சுழற்சியில் ஏ++ (ஏ பிளஸ் பிளஸ்) எனும் உயர் மதிப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. குறிப்பாக பிஷப் ஹீபர் கல்லூரி நான்கு புள்ளிகளுக்கு 3.69 சிஜிபிஏ மதிப்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு நாக் மதிப்பீட்டு சுழற்சிகளில் 4+ மற்றும் ஏ4 புள்ளிகளுக்கு 3.58 சிஜிபிஏ தரத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதிய நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி மாணவர்கள் மறியல்
அரியலூர், செப்.23 - அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத் துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கல்லூரி மாண வர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இக்கல்லூரியில் பயிலும் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த மாண வர்கள் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை போதிய பேருந்துகள் இல்லாததால், 2 மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாள்தோறும் அவதிப்படும் மாணவ, மாணவிகள் அரியலூர் - ஜெயங் கொண்டத்துக்கு மதியம் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இது வரை நடவடிக்கை எடுக்காததால், மாண வர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்ட கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாணவ, மாணவிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், கூடுதல் பேருந்து கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்
இ-சேவை மைய குறைகள் களையப்படுமா?
கும்பகோணம், செப்.23- கும்பகோணம் அரசு இ-சேவை மையத் தில் நிலவும் குறைபாடுகளை கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள் ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிறியமலர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை வகித் தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் சீனிவாசன், மருத்துவ அலுவலர் கமருள் ஜமான், மாற்றுத் திறனாளிகள் நல தாசில்தார் பிரேமாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கத்தின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் அன்புமணி, நகரத் தலைவர் பாரூக், ஒன்றியக் குழு உறுப்பினர் மகேஸ்வரி, ஒன்றி யச் செயலாளர் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆறு மாதங்களாக நிலுவையில் உள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய வீட்டுமனை பட்டாவை உடனே வழங்க வேண்டும். அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் பயன்பெறும் வகையில் விண் ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அரசு இ-சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகள் விண்ணப் பித்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள பணி யாளர்கள், பல நேரங்களில் சர்வர் வேலை செய்யவில்லை என அலட்சியமாக கூறி மாற்றுத்திறனாளிகளை திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளி கள் தினமும் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே கும்பகோணம் இ- சேவை மையத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென தனி பணியாளரை அமைத்து, சேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. கூட்ட முடிவில் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் தெரிவிக்கை யில், “மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்ப டும். அக்டோபர் 8 அன்று மாற்றுத்திற னாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி களுக்கான வாகனம் மற்றும் தையல் இயந்தி ரம் தேவைப்படுபவர்களுக்கு தேர்வு முறை யில் வழங்கப்படும்” என்றார்.
7 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை மன்னார்குடி 2 ஆவது வார்டு அவலம்
திருவாரூர், செப்.23 - ஏழு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை யடுத்து, சிபிஎம் கள ஆய்வு மேற்கொண்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நக ராட்சிக்குட்பட்ட 2 ஆவது வார்டில் தெப்பக் குளம் மேல்கரையில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேற்கண்ட தெரு ஜெயின தெருவில் சென்று, இணைப்புச் சாலையாக உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த வீதி, மண் சாலையாக இருந்த போது, 2016 ஆம் ஆண்டு தெரு கமிட்டி சார்பாக, அப்பகுதி மக்கள் ரூ.3 லட்சம் நிதி திரட்டி தார்ச் சாலை யாக அமைத்தனர். தற்போது இந்த தார்ச்சா லையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பல இடங்கள் மண் சாலையாக மாறியுள்ளன. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடி யாத நிலையில் உள்ளது. இதுகுறித்து, இங்கு குடியிருப்பவர்கள் நகராட்சி மன்ற கவுன்சிலர் பாலமுருகனிடம் முறையிட்டும், நகராட்சி அலுவலர்களிடம் மனு அளித்தும், சாலை வசதி கேட்டு போராட்டங்கள் நடத்தியும் தற்போது வரை இந்தச் சாலை புதிதாக போடப்படவில்லை. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் சாலையின் நிலை குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நேரில் சென்று சாலையை பார்வையிட்டனர். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை நியாயமானது. மன்னார்குடி நக ராட்சி நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி, உடனடியாக புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். இல்லையெனில் இப்பகுதி மக்களை திரட்டி சிபிஎம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்றார். ஆய்வின்போது மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் டி.முருகையன், கே.தமிழ்மணி, நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.
96 மாத டிஏ உயர்வை வழங்க கோரிக்கை
கும்பகோணம், செப்.23- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சின்னசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத டிஏ உயர்வை உடனடியாக அமலாக்க வேண்டும். குறைந்தபட்ச பென்சன் ரூ.7850 வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை அம லாக்க வேண்டும். வாரிசு பென்சன்தாரர்களுக்கு மருத்துவ நிதி உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
தூய்மையே சேவை இயக்கம்
திருவாரூர், செப்.23 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், ஆனைக் குப்பம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2 அன்று, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ‘குப்பையில்லா இந்தியா’ என்ற இலக்கினை அடைய ‘தூய்மையே சேவை இயக்கம்’ நடைபெற்று வருகிறது. இந்த இயக்கமானது செப்.15 முதல் மாவட்டம் முழு வதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக் கிழமை நன்னிலம் வட்டம் ஆனைக்குப்பம் ஊராட்சி, வெள்ளை செட்டி குளத்தில் நடந்து வரும் தூய்மைப் பணி யினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.
தூத்தூர் - வாழ்க்கை இடையே கதவணை கட்ட வலியுறுத்தல்
அரியலூர், செப்.23 - அரியலூர் மாவட்டம் தூத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணை கட்ட வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவ லகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்தூர் அருகே கொள்ளிடத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக 5 இடங்களில் அமைக்கப்பட்டு வரும் போர்வெல் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் துறை யினர் அனைவரும் வெளியேற வேண்டும் என ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் செங்கமுத்து, விவசாய பாதுகாப்புச் சங்க மாவட்ட அமைப்பாளர் க.பால சிங்கம், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலர் வாரணவாசி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலைஞர் நூற்றாண்டு அரசுப் பள்ளிகளில் கலை விழா போட்டிகள்
அரியலூர், செப்.23 - முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தி லுள்ள 50 அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில், கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப் பட்டன. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமையாசிரியை க.முல்லைக்கொடி தலைமை வகித்தார். உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், மாவட்ட அளவில் சது ரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவி சம்ம வாகினிக்கு கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பேரூராட்சி உறுப்பினர்கள் பங்கேற்று சிறப் பித்தனர். சிறுவளூர் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற கலைப் போட்டிகளை பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா தொடக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதேபோல் மாவட்டத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கலைவிழா போட்டிகள் நடத்தப்பட்டன.
தற்காலிக பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடைகள் அமைக்க கோரிக்கை
அரியலூர், செப். 23- அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் பய ணிகள் வசதிக்காக கூடுதல் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அரியலூர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர்மன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலிய மூர்த்தி, நகராட்சி ஆணை யர்(பொ) அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தங்க ளது பகுதிகளில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாத தால், தற்போது பெய்த மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களைச் சூழ்ந்துள்ளது. வார்டு பகுதிகளில் சரிவர குப் பைகள் அள்ளப்படுவ தில்லை. இதுகுறித்து சம்பந் தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இதற்கு எங்களால் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. எனவே மழைநீர் வடிகால் வசதிகள் செய்துத் தரவேண்டும். குப்பைகளை தினமும் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி சாலையில் உள்ள பாதாளச் சாக்கடை நீரேற்று நிலையத்திலிருந்து தற்காலிக பேருந்து நிலை யம் வரை தெருவிளக்குகள் அமைப்பது, தற்காலிக பேருந்து நிலையத்தில் பய ணிகள் வசதிக்காக கூடுதல் நிழற்குடைகள் அமைக்க வேண்டும், 1 முதல் 18 வார்டுகளிலும் சேதமடைந் துள்ள சிறுபாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலங் கள் அமைத்து, மழைநீர் வடி கால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத் தப்பட்டன.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க கோரிக்கை
புதுக்கோட்டை, செப்.23 - தமிழ்நாடு அரசு அனைவருக்கும் வரைய றுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கி, குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் புதுக்கோட்டை 7 ஆவது மாவட்டப் பேரவை சனிக்கிழமை புதுக் கோட்டையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித் தார். பெ.மணிவண்ணன் வரவேற்றார். பேர வையைத் தொடங்கி வைத்து காப்பீட்டுக் கழக ஓய்வூதியர் சங்க கோட்டத் துணைத் தலைவர் மு.அசோகன் உரையாற்றினார். மாவட்ட கருவூல அலுவலர் செ.இராஜ லெட்சுமி சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் எம்.நாதன் நிறைவுரையாற்றி னார். தமிழ்நாடு அரசு அனைவருக்கும் வரை யறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கி, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதி யர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். அரசு தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தினை ஏற்படுத்த வேண் டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். குறைபாடுகளை நீக்கி புதிய காப்பீடு திட்ட அட்டை வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். குரும்பூ ரில் இயங்கி வந்த பாரி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். புதுக் கோட்டை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிஎஸ்என்எல் டவர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தர்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் மாநகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
கரூர், செப்.23 - கரூர் மாநகரில் சேதமடைந்துள்ள சாலை களை சீரமைத்து புதிய சாலைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கரூர் மாவட்ட 6 ஆவது பேரவை கூட்டம் தாந்தோனிமலை யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் து. சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை வகித் தார். மாவட்ட துணைத் தலைவர் அ.மோகன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில முன்னாள் துணைத் தலைவர் எம். சுப்பிரமணியன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் சிறப்புரையாற் றினார். மாவட்டத்தின் புதிய தலைவராக து.சாமு வேல் சுந்தர பாண்டியன், செயலாளராக வி. மோகன்குமார், பொருளாளராக கே.சோம சுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியான 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியத்தை உடனே வழங்கிட வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும். கரூர் மாநகரில் சேத மடைந்த சாலைகளை உடனே புதிய சாலை களாக அமைக்க வேண்டும். தெரு விளக்கு களை பராமரிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
தஞ்சாவூர், செப்.23 - சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழியாக, இராமநாதபுரத்திற்கு தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என்.ஜெய ராமன், செயலாளர் வ.விவேகானந்தம் ஆகி யோர், தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோ ருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அம்மனுவில், “இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி வரு கிறது. இந்நிலையில், இராமநாதபுரம், காரைக் குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக் கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப் பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, திருவாரூர் போன்ற பகுதியிலிருந்து சென்னையில் வசித்து வரும் பொது மக்கள், அலுவலர்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள், தீபா வளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில், சென்ற ஆண்டு சிறப்பு ரயில் இயக்கியது போன்று (சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - இராமேஸ்வரம் வண்டி எண்.06041/06042) இந்தாண்டும் இயக்கம் வேண்டும். சென்னை எழும்பூரில் இருந்து இராம நாதபுரம் வரை திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி தடங்கள் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து முன் கூட்டியே அறிவித்தால், பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும், கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்லவும் வசதியாக இருக்கும்” என குறிப் பிடப்பட்டுள்ளது.
சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்த அறிவுறுத்தல்
அரியலூர், செப். 22- சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிக்கையில், “அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தற்போது நாற்றுவிடும் பணி நடைபெற்று வருகிறது. விவ சாயிகள் தங்களுக்கு தேவையான விதை நெல்லை வாங்கும் போது, அரசினால் உரிமம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். விவசாயிகள் சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்தினால் நல்ல தரமான வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும். பயிர் எண்ணிக்கை பராமரிக் கப்படும். பூச்சி நோய் தாக்குதல் குறையும். ஒரே நேரத்தில் அறுவடைக்கு வரும். நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் உண்மை நிலை விதை களை வாங்கும் போது அது நம் பகுதிக்கு, நம் பருவத்திற்கு ஏற்றதா என்று பார்த்து வாங்க வேண்டும். கட்டாயம் விற்பனையாளரிடம் இருந்து ரசீதை கேட்டுப் பெறவேண் டும். ரசீதில் காலாவதி நாள், லாட் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக் கிறதா என பார்க்க வேண்டும். விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அறிவிக்கை செய்யப்படாத தனியார் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும் போது பதிவு சான்றிதழ், முளைப்புதிறன் சான்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இருப்புப் பதிவேடு, கொள்முதல் ரசீது ஆகியவற்றையும் விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும். இவை கள் ஆய்வின் போது இல்லாவிட்டால் விதைச் சட்டப்படி விதை விற்பனை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்