திருவாரூர், ஜூலை 9 - நூறு நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும். பொதுமக்களுக் கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, திருவாரூர் ஒன்றி யம் மாங்குடி, வடகரை ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடகரை கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர் கே.சிவன்செயல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, ஒன்றியச் செய லாளர் என்.இடும்பையன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள மாங்குடி, வடகரை ஊராட்சியில் சேத மடைந்து போக்குவரத்துக்கு இடையூ றாக உள்ள அனைத்து தெரு சாலை களையும் சீர்செய்து தார்ச் சாலையாக அமைக்க வேண்டும். மாங்குடி, வட கரை ஊராட்சியில் விபத்தை ஏற்படுத்த கூடிய அளவில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உடனே சீர்செய்ய வேண்டும். மாங்குடி, வடகரை ஊராட்சியில் நூறு நாள் வேலையை உடனே துவங்கி, சட்டக் கூலி ரூ. 319-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும். ரேசன் கடையில் அனைத்து பொருள்களையும் ஒரே நேரத்தில் தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்ற கோரி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.