districts

பாலியல் வன்முறையை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுக! மாதர் சங்க நன்னிலம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

குடவாசல், ஏப்.16 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நன்னிலம் ஒன்றிய 16 ஆவது மாநாடு பேர ளத்தில் உள்ள நடைபெற்றது. மாநா ட்டிற்கு ஒன்றிய தலைவர் ஆர்.சந்திரா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி.அம்சம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.கலைச் செல்வி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.  மாவட்ட தலைவர் ஆர்.சுமதி வர வேற்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் டி. வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்தி  பேசினார். சிபிஎம் மாவட்ட கவுன்சி லர் ஜெ.முகமது உதுமான் மற்றும்  நகர செயலாளர் சீனி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவராக எம்.பரி மளா மேரி, செயலாளராக பி.தனம்,  பொருளாளராக ஆர்.சந்திரா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டதை அறி வித்து மாவட்டச் செயலாளர் பி. கோமதி உரையாற்றினார். பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான பாலியல் வன்முறையை  தடுத்து நிறுத்திட கடுமையான சட்டங் களை இயற்ற வேண்டும். ஒன்றிய அரசின் தவறான கொள் கையால் சமையல் எரிவாயு விலை  உயர்வை உடனே குறைக்க வேண்டும்.  மகளிர் குழு என்ற பெயரில் பெண்களை அச்சுறுத்தும் நுண் நிதி நிறுவனங்களை அரசு  முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.