districts

சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெறுக!

பாபநாசம் ஆக.27 - சுங்க கட்டண உயர்வை  திரும்பப் பெற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம்  எம்.எல்.ஏவுமான ஜவா ஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 28 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1  ஆம் தேதி முதல், 5 சதவீதம்  முதல் 7 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப் பட இருக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்ப தாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச் சாவடிகளில் எவ்வ ளவு கட்டணம் வசூல் செய்யப் பட்டிருக்கிறது. அதன் வாயி லாகச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற  புள்ளி விவரங்கள் இது வரை வெளிப்படைத் தன்மை யோடு அறிவிக்கப்பட வில்லை.  இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண் டும் என்று மனிதநேய மக்கள் கட்சி பலமுறை கோ ரிக்கை வைத்துள்ளது.‘ ஃபாஸ்ட் டாக்’ என்ற பெய ரில் வசூலிக்கப்படும் முன் தொகை வாயிலாகப் பெரு மளவிலான பொருளா தாரம் வாகன உரிமையாளர் களிடமிருந்து சுரண்டப்படு கிறது. கடந்த ஜூன் மாதம் தமிழ் நாட்டில் 25 சுங்கச் சாவடி களில் கட்டணம் உயர்த்தப் பட்ட நிலையில், தற்போது 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வின் வாயிலாகப் பேருந்து கட்டண உயர்வு  மற்றும் வாடகை வாகனங்க ளின் கட்டணம் உயர்த்தப்படு வதோடு, விலைவாசிகளின் உயர்வும் தவிர்க்க முடியாத தாக ஆகிவிடும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரந்தூர் சுங்கச் சாவடியில் கூடுதலாக ரூ.28  கோடி வசூல் செய்தது என  இந்தியத் தலைமை கணக் காயர் அறிக்கை அளித்தது கவனிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் என்.எச்.ஏ.ஐ எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உடனடியாக சுங்க கட்டண உயர்வினைத் திரும்பப் பெற வேண்டும்.  இல்லையென்றால் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிடும் போராட் டத்தை அறிவிக்க நேரிடும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.