districts

மதுரை சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்

மதுரை, மே 2-

   மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்தி ரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யா ணம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி நடை பெற்றது. இதில் திருக்கல்யாணத்தை ஆயிரக்க ணக்கான பக்தர்கள் நேரிலும், ஊடகங்கள் வாயி லாகவும் பார்த்தனர்.

   மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, பெங்களூரு ரோஜா, தாய்லாந்து நாட்டிலிருந்து வர வழைக்கப்பட்ட ஆர்க்கிட் போன்ற பத்து டன் மலர்களைக் கொண்டு திருக்கல்யாண மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

   திருக்கல்யாணத்தைக் காண வரும் பக்தர் களுக்கு வழங்குவதற்காக சுமார் ஒரு லட்சம் லட்டு  தயாரிக்கும் பணிகள், விருந்துக்கு உணவு தயாரிக்கும் பணிகளும் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, புதன்கிழமை (இன்று) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.