புதுக்கோட்டை, ஜன.31 - வேங்கைவயலில் வயது முதிர்வால் இறந்த மூதாட்டியின் உடல் வெள்ளிக் கிழமை அடக்கம் செய்யப்பட்டது. கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் ஜீவானந்தம் மகன் முரளிராஜா உள்ளிட்ட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வேங்கைவய லுக்குள் வெளியூர் ஆட்களை அனுமதிக்க போலீசார் மறுத்துவரும் நிலையில், முரளி ராஜாவின் பாட்டி கருப்பாயி (84) வியாழ னன்று வயது முதிர்வு காரணமாக உயிரி ழந்தார். இந்நிலையில், இறுதிச் சடங்குக்கு வரும் உறவினர்களை காவல்துறையினர் வழக்கம்போல உள்ளே அனுமதிக்காமல் மறுப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனைத் தொடர்ந்து இறப்புச் சடங்குக்கு வருவோரை அனுமதிப்பது என காவல்துறை முடிவு செய்து அனுமதித்தது. இறந்த கருப்பாயியின் உடலுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், சு.மதியழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, துணைத் தலைவர் எம்.ஏ. ரகுமான், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சி.அன்புமணவாளன், எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியச் செயலாளர் எஸ்.ரகுபதி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், வழக்குரைஞர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மூதாட்டியின் உடல் வெள்ளிக் கிழமை மாலை அதே ஊரில் உள்ள மயா னத்தில் அடக்கம் செய்யப்பட்டது.