திருச்சிராப்பள்ளி, அக்.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய 16 ஆவது மாநாடு வெள்ளியன்று துறையூரில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள் சங்கிலிதுரை, கமலம் ஆகி யோர் தலைமை வகித்த னர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் காசிராஜன் ஏற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் பாண்டி யன் துவக்க உரையாற்றி னார். துறையூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, அரசு தொழிற்சாலைகள், ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க வேண்டும். துறை யூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்தையும் விவசா யிகளையும் பாதுகாக்க வேண்டும். போக்குவரத்து கழகம் மின் வாரியத்தில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துறையூர் ஒன்றியச் செய லாளராக எம்.சங்கிலிதுரை உள்பட 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய் யப்பட்டது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் சுப்பிர மணியன் நிறைவுரையாற்றி னார்.