தஞ்சாவூர், மே 15-
தஞ்சாவூர் ஒன்றியம் நீலகிரி ஊராட்சி கன்னியம்மாள் நகரில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 347 ஏழைக் குடும்பங்களுக்கு, தமிழக அரசின் சார்பில் மனைப் பட்டா வழங்கப்பட்டது. இதில் பலர் அந்த இடத்தில் வீடு கட்டி குடியி ருந்து வரும் நிலையில், பலர் இன்னும் குடி வராமல் உள்ளனர். காலி மனையாகவும் உள்ளது. பொதுமக்கள் குடியிருக்கும் வகையில் இப்பகுதியில் சாலை, குடிநீர், மின் விளக்கு என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ளது. அரசு மனைப்பட்டா வழங் கியதுடன் எந்த அடிப்படை வசதி களையும் செய்து தராததால், ஒரு சிலர் சிரமங்களை பொறுத்துக் கொண்டு குடியிருந்து வரும் நிலை யில், பலர் இன்னும் குடிவராத நிலை உள்ளது.
டாக்டர் சுப்பையன் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது 347 பேருக்கு அவரே வழங்கிய மனைப் பட்டாவை ரத்து செய்து விட்டு, மீண்டும் 60 பேருக்கு மனைப்பட்டா வழங்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் 347 பேரின் மனைப்பட்டாவை ரத்து செய்யக் கூடாது என நீதிமன்றத்தை நாடி யுள்ளனர். இதற்கான தடையாணை யும் பெறப்பட்டு, வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாக பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் கூறப்படு கிறது. இந்நிலையில், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு, மாவட்ட நிர்வாக உயர் அலுவலர்கள், வரு வாய் கோட்டாட்சியர், வட்டாட்சி யர் ஆகியோர் கன்னியம்மாள் நக ருக்கு சென்று பார்வையிட்டு, அங்கி ருந்த பொதுமக்களிடம், உங்களுக் கான மனைப்பட்டாவை ரத்து செய்யப் போகிறோம்.
புதிதாக பட்டா வழங்க போகிறோம். நீங்கள் அனைவரும் காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என்று கூறி யுள்ளனர். இதனால், நீண்ட காலமாக குடியிருந்து வரும் பட்டியலினத் தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினர் தாங்கள் அங்கி ருந்து விரட்டப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி களை சந்தித்து பேசினர்.
இதையடுத்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிபிஎம் நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ராவிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், ‘‘தாங்கள் குடியிருக் கும் இடத்திற்கான மனைப்பட் டாவை உறுதி செய்ய வேண்டும். தாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’’ என கூறப்பட்டிருந் தது.
பட்டாவை ரத்து செய்யக் கூடாது
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் ஒன்றி யச் செயலாளர் கே.அபிமன்னன் கூறுகையில், ‘‘ஆளும் கட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக, அதிகாரி கள் பட்டியலின ஏழை மக்களுக்கு வழங்கிய மனைப்பட்டாவை ரத்து செய்ய முயற்சி செய்து வருவதாக தெரிய வருகிறது. நான்கு நாட்க ளுக்கு முன்பு அங்கு வந்து அதி காரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. அதிகாரிகள் பொதுமக் களே மிரட்டும் தொனியில் பேசி யுள்ளனர். தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாகவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட மனைப்பட்டாவை ரத்து செய்யக்கூடாது. அவர்களுக் கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். அந்த பகுதியில் பொது மக்கள் குழந்தைகளுடன் நீண்ட காலமாக குடியிருந்து வருகின்ற னர். அவர்களுக்கு குடிநீர், கழிப் பறை, சாலை, மின் வசதி என அடிப் படை தேவையான அனைத்தை யும் செய்து தர வேண்டும். இல்லை யேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தப் பகுதி மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கும்’’ என்றார்.
மனு அளிக்கும்போது, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் து. கோவிந்தராஜ், சுமைப்பணி தொழி லாளர் சங்க நிர்வாகி லூகாஸ், குடியிருப்போர் சங்க தலைவர் பெரியசாமி, வினோத் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்டோர் உடனிருந்தனர்.