கும்பகோணம், நவ.5- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் 34 ஆவது வார்டு செந்தமிழ் நகரில் புதிதாக பூங்கா அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 34 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வம் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ. 36 லட்சத்தில் புதிய பூங்கா அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பூங்காவை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், செவ்வாயன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாநகர அவைத் தலைவர் வாசுதேவன், மண்டலக் குழு தலைவர்கள் மனோகரன், பாபு என்ற நரசிம்மன், 34 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.