districts

img

தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவி தேர்வு

கும்பகோணம், செப்.19 கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இயற்பியல் இளநிலை இரண்டாமாண்டு பயிலும் தேசிய மாணவர் படையைச் சார்ந்த வி. சந்தனேஸ்வரி என்ற மாணவி மதுரை இடையபட்டியில் உள்ள என்சிசி பயிற்சி அகாடமியில் 30 நாட்கள் சிறப்புப் பயிற்சியில் கலந்து கொண்டு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி க்கு தேர்வானார்.  புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய  முகாமிலும் பங்கேற்றார். தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி களில் தமிழ்நாட்டைச் சார்ந்த குழு இரண் டாம் இடம் பிடித்தது. இந்தக்குழுவில் கும்ப கோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவி சந்தனேஸ்வரியும் இடம் பெற்றார். ஏசியா அளவில் துப்பாக்கிச்சுடுதல் போ ட்டிக்கு தேர்வான மாணவி சந்தனேஸ்வரி யை கல்லூரி முதல்வர்  அ. மாதவி அழைத்துப் பாராட்டி வாழ்த்தினார்  தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினென்ட்   எட்வர்ட் சாமுவேல் வேதியியல் துறைத் தலைவர்  மீனாட்சிசுந்தரம், மற்றும் பேராசிரியர்களும் வாழ்த்தினர்.