districts

img

மாணவர்களிடம் பணம் வசூலித்தது எதற்காக?

கல்வித்துறை நடவடிக்கை எடுக்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஜூன் 26 - மயிலாடுதுறையில் உள்ள  கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்  பள்ளியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்  போவதாக கூறி, ஆயிரக்கணக் கான ரூபாய்களை வசூலித்தனர். ஆனால், அப்பள்ளியில் உள்ள கழிப்பறைகளை முற்றிலும் பயன் படுத்த முடியாத நிலையில், மிக  மோசமான சுகாதாரச் சீர்கேட்டு டன் உள்ளன. இதனால் மாணவர்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்திய மாண வர் சங்கம் கண்டனம் தெரிவித் துள்ளது. இது தொடர்பாக இந்திய மாண வர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை நகராட்சியில் என்.கிட்டப்பா நக ராட்சி மேல்நிலைப் பள்ளி நூறாண் டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இந்த  ஆண்டு மட்டும் 11 ஆம் வகுப்பு  மற்றும் 12 ஆம் வகுப்பு சேர்க்கை க்கு 1000 ரூபாய் துவங்கி, 10,000 ரூபாய் வரை கட்டாய  வசூல் செய்யப்பட்டது.  எதற்காக வசூல் செய்கி றீர்கள் என்று இந்திய மாணவர்  சங்கம் தொடர்ந்து கேள்வி எழுப்பி யதற்கு,  ‘பள்ளிக்கூடங்களில் நிர்வாகம் செய்வதற்கும், அடிப் படை வசதிகளை மேம்படுத்து வதற்கும்’ என கல்வித் துறையில் இருந்து பதில்கள் வந்தன. ஆனால் பள்ளியில் உள்ள கழி வறைகளைக்கூட சுத்தம் செய்யா மல், மாணவர்களுக்கு இயற்கை உபாதைகள் ஏற்படும் போது, அவர்களை வீட்டுக்கு அனுப்பும்  சூழல்தான் தொடர்ந்து நீடிக்கிறது. அது மட்டுமல்லாமல் மாண விகள் பயன்படுத்துவதற்குரிய சானிட்டரி நாப்கின் எரியூட்டும் கரு வியானது அந்தப் பள்ளியில் இயங்கவே இல்லை. மாணவிகள்  அந்த கழிவறையை பயன்படுத்து வதற்கு அச்சப்படுகின்றனர். பள்ளிக்கூட சூழலும் படிப்பதற்கு  தகுந்தாற்போல் இல்லை. எனவே  மாவட்ட முதன்மை கல்வி நிர்வா கம் உடனடியாக இதில் தலை யிட்டு, பள்ளி நிர்வாகத்தின் மீதும்  நிர்வாக சீர்கேட்டில் ஈடுபடும் பள்ளி யின் தலைமை ஆசிரியர் அன்புச் செழியன் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  ஊழலில் வளரும் தலைமை யாசிரியர் அன்புச்செழியன் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். வசூலித்த பணத்தை மாண வர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் இந்திய மாணவர் சங்கம், மாண வர்களை திரட்டி போராட்டங் களை நடத்தும்.  அதேபோல மயிலாடு துறையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் கல்வித் துறை உடனே ஆய்வுகள் மேற் கொண்டு, அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகளை கண்டறிந்து, இந்தக் கல்வியாண்டிலேயே அவற்றை சரிசெய்ய வேண்டும்” தெரிவித்துள்ளது.