அறந்தாங்கி, ஆக.18
கட்டுமாவடி அரசுப் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசையை பள்ளி வளர்ச்சி குழுவினர் வழங்கி னர்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு கட்டுமாவடியில் இயங்கி வரும் பள்ளி வளர்ச்சி குழுவின் சார்பாக சீர்வரிசை வழங்கப்பட்டது. பீரோ, டேபிள், சேர், மின்விசிறி, சுவர் கடிகாரம், பிரிண்டர் உள்ளிட்ட ஏராள மானப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சி குழுவினரை வரவேற்றனர். சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த சீர்வரிசை பள்ளிக்கு வழங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சி குழு, பெற்றோர் ஆசிரி யர் கழகம் மற்றும் சிகாபுதீன் அறக்கட்டளையைச் சேர்ந்த காந்தி சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.