கும்பகோணம், ஜூலை 7-
உலக சாக்லெட் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் சாக் லெட் வேடம் அணிந்து கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் தேதி உலக சாக்லெட் தினமாக கொண்டாடப் படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் சாக்லெட் ஒன்றாகும். சாக்லெட்கள் உண்பது மகிழ்ச்சி யின் அடையாளம் என்பதையும் தாண்டி, ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அதிக கோகோ நிறைந்த சாக்லெட்கள் உடலுக்கு மிகவும் நல்லது. டார்க் சாக்லெட்டில் தான் அதிக கோகோ இருக்கிறது. மில்க் சாக்லெட் டில் குறைந்த கோகோ உள்ளது. வொயிட் சாக்லெட்டில் கோகோ இருக்காது.
இந்நிலையில் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவ-மாணவியர்கள் சாக்லேட் போல உடையணிந்து நடனமாடி சாக்லெட் தினத்தை கொண்டாடினர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் குழந்தைகளை வாழ்த்தினார். பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்தி கேயன் சிறப்பாக செயல்பட்ட மாணவர் களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய தின்பண்டங் களான கடலை மிட்டாய், தேன் மிட்டாய், ஜீனி மிட்டாய், இலந்தை மிட்டாய், பாக்கு மிட்டாய், தேங்காய் மிட்டாய் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.