districts

img

ரத்த தானம் செய்தோருக்கு சான்றிதழ் வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 25 -

   இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழக மும் திருச்சி அரசு மருத்துவ மனை ரத்த வங்கியும்  இணைந்து செந்தண்ணீர்புரத் தில் ஞாயிறன்று ரத்த தான முகாம் நடத்தின.

   முகாமில் ஏராளமான இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமை தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மூன்றாம் மண்டல கோட்டத் தலைவர் மதிவாணன், திருச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கி  மருத்துவ அலுவலர் வளர்மதி,  35 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகி யோர் துவக்கி வைத்தனர்.

    சங்கத்தின் பாரதி நகர்  கிளைச் செயலாளர் கார்த்திக் தலைமை வகித் தார். வாலிபர் சங்க முன்னாள்  மாநில துணைத்தலைவர் கோவி.வெற்றிச்செல்வன், வாலிபர் சங்க மாவட்ட  தலைவர் பா.லெனின், மாவட்ட செயலாளர் சேது பதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மங்கை பிளாஸ்டிக் உரிமையாளர் சிவா செந்தண்ணீர்புரம் குடி யிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில் 50 பேர் ரத்த தானம் செய்தனர். இவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

;