திருச்சிராப்பள்ளி, ஜூலை 21 - நாட்டில் ஆற்றல் துறையின் முன்னணி நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், சென்னை சர்வதேச வட்டத்தில், இந்திய கார் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் தருணத்தில், ஓட்டப் பந்தய கார்களுக்கு என்று பிரத்யேக மாக உருவாக்கப்பட்ட உயர் அள வில் ஓக்ட்டேன் கொண்ட ஓட்டப் பந்தய எரிபொருள் ஆன STORM-X-ஐ அறி முகப்படுத்தியது. மேலும், இந்தியாவில் மோட்டார் விளையாட்டுத் துறையில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC) உடனான தனித்துவம் வாய்ந்த உடன்படிக்கை கையெழுத்து ஆனது. நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் இயக்குநர் (வர்த்தகம்) வி.சதீஷ்குமார் STORM-X பிராண்டின் சின்னத்தை அறி முகப்படுத்தினார். இந்தியன் ஆயில் இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி) அலோக் சர்மா, எம்எம்எஸ்சி-யின் தலை வர் அஜித் தாமஸ், செயலர் பிரபா சங்கர், துணைத் தலைவர் விக்கி சந்தோக்கே உள்ளிட்ட எம்எம்எஸ்சி-யின் நிர்வாகிகள் முன்னிலை வகித்த னர். இந்த கூட்டுறவு மூலமாக ஒரு மைல்கல் சாதனை படைக்கப்பட்டு உள்ளது எனலாம். ஏனெனில், இந்தியன் ஆயில் நிறுவனம், இந்திய தேசிய ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப்கள் (INRC) நடைபெறும் சமயங்களில், ஓட்டப் பந்தய எரிபொருள்களையும் லூப்ரிகன்ட்களையும் வழங்குவதோடு மட்டுமின்றி, அவை நடைபெறும் இடத்திற்கும் வாகனங்களுக்கும் பிராண்டிங் என்பதை வழங்கிடும். உயர் தரம் கொண்ட எரிபொருள் களையும் லூப்ரிகன்ட்களையும் வழங்குவதில் முன்னணி வகித்து வரு கிறோம். நாட்டின் முதல் ஓக்ட்டேன் எரிபொ ருள்– XP100, மிக குறைந்த உமிழ்வைத் தந்து எரிபொருள் செயல்திற னைத் தரும் XTRAGREEN டீசல் ஆகி யவை நாங்கள் அறிமுகப்படுத்தியவை. மேலும், ப்ளக்ஸ் ப்யூவல் வண்டி களுக்கான எத்தனால் 100 மற்றும் நிலைத்த எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த கரியமில வாயு உமிழ்வு உடைய க்ரீன் லூப்ரிகன்ட்கள் ஆகிய வையும் நாங்கள் தயாரித்தவற்றில் அடங்கும். மோட்டார் விளையாட்டுகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு உள்ள அர்ப்பணிப்பு உணர்வை மீண்டும் பறை சாற்றும் வகையில் STORM-X-இன் அறிமுகம் அமைந்துள்ளது என சதீஷ் குமார் தெரிவித்தார்.