திருச்சிராப்பள்ளி, மார்ச், 12, பெண்களுக்கு பணியிடங்களில் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பெண் களுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, மக்களை தேடி மருத்துவம், ஆஷா பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். கட்டு மானம், தரைக்கடை, வீட்டு வேலை செய்யும் பெண்கள் உட்பட முறைசாரா பெண் தொழி லாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3000 பென்சனை 55 வயதில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு- அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் சங்கம் சார்பில் உறையூரில் உரிமைப் முழக்க போராட்டம் நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு கன்வீனர் செல்வி, சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் டெய்சி, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, சந்திரன், மல்லிகாபேகம், ராணி, கலைச்செல்வி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். திருவாரூரில் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தையொட்டி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு, மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பேரணி-கருத்தரங்கம் நடைபெற்றது. பேரணிக்கு மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பா.கோமதி, உழைக்கும் பெண்கள் மாவட்ட கன்வினர் இரா.மாலதி ஆகியோர் தலைமை வகித்தனர். பேரணியில் பங்கேற்றவர்கள், பெண் களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். எட்டு மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என முழக்கங் களை எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாதர் சங்க மாநில பொருளாளர் வி.பிரமிளா,சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.தேவமணி ஆகியோர் கருத்துரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர், டி.முருகையன், தலைவர் எம்.கே. என்.அனிபா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சலாவுதின், தலைவர் எ.கே.வேலவன் மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.