அரியலூர், ஆக.11 - ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ எனும் இலக்கை அடைய அரிய லூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட் சிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறி வுறுத்தினார். போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமை கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அரியலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடை பெற்றது. இதில் ஆட்சியர் மேலும் பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை யில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து உறுதிமொழி ஏற்கும் போது, அனைத்து பள்ளிகள் (பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள்), அனைத்து கல்லூரி மாண வர்களுக்கும், அதனை காணொலி வழியாக ஆசிரியர்கள் காட்சிப்படுத்தி, உறுதிமொழி ஏற்கச் செய்தல் வேண்டும். போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்த வேண்டும். இந்நிகழ்ச்சி மக்கள் கூடும் இடங்களில் ஒளிபரப்பப்படும். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடு களையும் காவல் மற்றும் கலால் துறை அலு வலர்கள் செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள், இந்த நிகழ்ச்சி யில் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களை கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் ஒவ்வொரு ஊராட்சியிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும்” என்றார்.