districts

img

குடவாசல் அரசு கல்லூரியில் கட்டுமான பணிகள் ஆய்வு

திருவாரூர், பிப்.14-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட செல்லூர் ஊராட்சியில் ரூ.15 கோடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் 21 வகுப்பறைகள் கொண்ட அரசு கலைக் கல்லூரி கட்டிட கட்டுமான பணியினை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியில் குடவாசல் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குடவாசல் வட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள செல்லூர் ஊராட்சிப் பகுதியில் குடவாசல் அரசு கலைக் கல்லூரிக்கு, கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இக்கல்லூரி கட்டிட பணியை அமைச்சர் கோவி. செழியன், மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யு.கரன் கரட் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.