districts

புதுமைப் பெண் திட்டம் தஞ்சை மாவட்டத்தில் 9,050 மாணவியர் பயன்

ஆட்சியர் தகவல் தஞ்சாவூர், மே 20- “பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற  பாவேந்தர் பாரதிதாசனின் பொன்மொழிக் கேற்ப கல்வி, பொருளாதாரத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக, அடுக்கடுக்கான சிறந்த திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்துவதன் மூலமாக தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.  சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ள டக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப, புதுமைப் பெண் திட்டம் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம்) உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு, மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத் தைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் வாயி லாக 9,050 மாணவிகள் பயன் பெற்றுள்ள னர் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்தார்.  பயனாளிகள் நன்றி  அயோத்தியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி ரெ.கார்த்திகா தெரிவிக்கையில், “குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி யில் இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். தமிழ்நாடு முதல மைச்சர் அறிமுகப்படுத்திய மூவலூர் ராமா மிர்தம் அம்மையாரின் உதவித்தொகை திட்டத் தின்கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறு கிறேன். எனது பெற்றோர்கள் விவசாயக் கூலித்  தொழில் செய்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் வழங்கிய ரூபாய் ஆயிரம் என் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.  முதல் முறை வழங்கிய ஆயிரம் ரூபாயை என்னுடைய தேர்வுக் கட்டணத்திற்காக பயன் படுத்திக் கொண்டேன். இந்தத் தொகையானது எனது குடும்ப வாழ்வாதார சுமையை குறைக்க  மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்திட்டத்தை  அறிமுகப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு எனது நன்றி” என்றார்.  இதேபோல், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி விக்னேஸ் வரி கூறுகையில், நான் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். எனது தந்தை பேராவூரணியில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக். அம்மா தினக்கூலியாக வேலை செய்கிறார்.  நானும், எனது தங்கை என என் குடும்பத் தில் இரு பெண் குழந்தைகள். எங்களை படிக்க வைக்க பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த னர். எங்களைப் போன்ற பல்வேறு குடும்பங்க ளின் சிரமங்களை போக்கும் வகையில் ரூ.1000  எனக்கு மாதந்தோறும் கிடைக்கிறது. இப்பணம்  என்னுடைய படிப்பிற்கு பெரிய உதவியாக இருக் கிறது. இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நன்றி” என்றார்.  இவ்வாறு புதுமைப் பெண் திட்டம், மாவட்ட  நிர்வாகத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொகுப்பு: ரெ.மதியழகன்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்

;