தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடந்துவருகிறது. பாபநாசம், மற்றும் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் பருத்தி எடுத்து வருகின்றனர். பருத்திக் கிடங்குகளில் வைக்க இடமில்லாத நிலையில் திறந்த வெளியில் வைக்கின்றனர். எதிர்பாராது மழை பெய்தால் திறந்த வெளியில் வைத்துள்ள பருத்தி மழையில் நனைகிறது.