மயிலாடுதுறை, ஆக-22 மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி காமராஜர் சாலையிலுள்ள துதி அரங்கில் கிறிஸ்டோபர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் தொடக்க விழா புதனன்று மாலை தரங்கம்பாடி பங்குதந்தை அருளானந்த அடிகள் தலைமையில் நடைபெற்றது. பொறையார் த.பே.மா.லு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான்சன் ஜெயக்குமார்,புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ், சீர்காழி செல்வநாதன், போதகர் விவேகானந்தன், ஹோப் பள்ளி முதல்வர் ஜேக்கப் சத்தியசீலன், பேராசிரியர்கள் பாலா, அருள்பிரகா சம், கிறிஸ்டோபர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆக்னஸ் சந்திரிக்கா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர். நிறைவாக எர்னஸ்ட் நெல்சன் நன்றி கூறினார்.