districts

img

கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் புதிய அரசு கட்டடங்கள் திறப்பு

புதுச்சேரி, ஆக.8- புதுச்சேரியின் புதிய  துணைநிலை ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. கைலாஷ்நாதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார்.

பதவி ஏற்பு விழா

புதுச்சேரி ராஜ்நிவாஸில் புதன் கிழமை (ஆக.7) நடைபெற்ற விழாவில், புதிய துணை நிலை ஆளுநர் கே. கைலாஷ் நாதனுக்கு சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம், செய்து வைத்தார்.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி,  சட்டப்பேரவை தலைவர்  செல்வம், எதிர்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி,  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தலைமை செய லாளர் சரத் சவுகான், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.