பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி திறன் மேம்பாட்டுப் பயிற்சி
அறந்தாங்கி, ஆக. 22- மணமேல்குடியில் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில் நுட்பவியல் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்க ளுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா னந்தம் தொடங்கி வைத்தார்.மணமேல்குடி வட்டார வளமை யாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் டக்ஸ் தட்டச்சு , சுவரொட்டி உருவாக் கம், இம்ப்ரெஸ் ,தமிழ் தட்டச்சு, கூகுள் இயக்ககம், ஹைடெக் லேப் செயற்கை நுண்ணறிவு மற்றும் மணற் கேணி போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர் கள். அய்யனார், முத்துதுரை ஆகியோர் செயல்பட்டனர். இப்பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் கள் சசிகுமார் மற்றும் பன்னீர்செல்வம் செய்திருந்தனர்.
சீமை கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
பாபநாசம், ஆக .22 - பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் திருக்கருகாவூர் அருகே சாலையோரம் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர் கள் சற்று கவனிக்கா விட்டால் தடுமாறி கீழே விழ நேரிடும். மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று திருக்கருக்காவூர் - மெலட்டூர் சாலையில் வெட்டாற்றின் கரையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. தேவையற்று வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை, வெட்டி அப்புறப் படுத்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை ,ஆக.22- மாணவர்களின் திற மையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கவும் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை யும், உயர்கல்வியினையும் உறுதி செய்யும் விதமாக தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழை,எளிய குடும்பங்க ளைச் சேர்ந்த மாணவர்கள், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போ கிறது.எனவே மாணவர்க ளின் கல்வி தடைபடாமல் அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு முதல மைச்சரால் தமிழ்ப்புதல் வன் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழி கல்வியிலும் பயின்ற மாணவர்கள் இத்தி;ட்டத்தில் பயன்பெறுவார்கள். தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கு மாதந்தோறும் தொகை ரூ.1000 நிதி உதவி வழங்கப் படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன் பெற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் நிரந்தர குடி யிருப்பாளர்களாக இருக்க வேண்டும்.6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அர சுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவராக இருக்க வேண்டும்.விண் ணப்பதாரரிடம் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும்.வரு மான உச்சவரம்பு உட்பட எந்தவித பாகுபாடும் இல்லை.வேறு திட்டங்க ளில் கீழ் நிதியுதவி பெறும் மாணவரும் கூடுதலாக இத்திட்டத்தில் பயன்பெற லாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்புதல் வன் திட்டத்தின் கீழ் 21 கல்லூரிகளை சேர்ந்த 3240 மாணவர்கள் பயன்பெற்றுள் ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த உயர்கல்வி துறை, பள்ளிகல்வித்துறை போன்ற அனைத்து அரசு துறைகள் மற்றும் வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட் டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் செயல்பாட்டு குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலு வலர், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர், பிறபடுத்தப்பட்டோர் நலத் துறை அலுவலர், முன்னனி வங்கி மேலாளர், கல்லூரி சார்ந்த பிரதிநிதிகள், மாவட்ட சமூக நல அலுவ லர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்புதல்வன் எனும் தொலைநோக்கு திட்டத்தினை செயல் படுத்தும் வகையில் மாண வர்கள் கல்லூரியில் அதிக அளவில் சேர்க்கைக்கு வரும் நிலை உள்ளதுடன் அவர்களது உயர்கல்வி தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வழி வகுப்பதாக அமையும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள் ளார்.
கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
அறந்தாங்கி, ஆக. 22 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப் பட்டு கிராமத்தில் பிச்சாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவி லில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் உண்டியல் பிரிக்கப்படாமல் இருந்தது. வியாழக்கிழமை அதிகாலை அப்பகுதியிலுள்ள மக்கள், கோயில் திறந்து இருப்பதை பார்த்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற கிராம மக்கள் கோவிலில் உள்ள உண்டியல் திருடப்பட்டதை பார்த்து அதி ர்ச்சியடைந்துள்ளனர். அப்பகு தியில் மக்கள் தேடி பார்க்கும் பொழுது அந்த கிராமத்திற்கு அருகே உள்ள குளக்கரையில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க பொட்டு, காசு மற்றும் பணம் திருடு போனது தெரியவந்தது. உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டு அங்கு வந்த அறந் தாங்கி காவல் நிலைய ஆய்வா ளர் கருணாகரன் விசாரணை செய்தார். கடந்த ஆண்டு கும்பாபிஷே கம் நடைபெற்று உண்டியல் பிரிக்கப்படாமல் இருந்த நிலை யில் உண்டியலில் ஒரு லட்ச ரூபா ய்க்கு மேல் பணம் மற்றும் தங்க பொட்டு, காசு இருந்ததாக கூறினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூரில் வீடு புகுந்து நகைகள், பணம் திருட்டு
தஞ்சாவூர், ஆக.22 - தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கரந்தை பூக்குளம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி மஞ்சுளா (49). இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அருகி லுள்ள வடவாற்றில் குளிப்பதற்காக வீட்டைப் பூட்டி விட்டு சாவியை முன்பக்கம் உள்ள கடையில் வைத்துச் சென்றார். ஆற்றில் குளித்து விட்டு மஞ்சு ளா வீட்டுக்கு திரும்பியபோது முன் பக்கக் கதவு திறந்து கிடந்தது. மேலும், வீட்டில் இருந்த நான்கே முக்கால் பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பதும், அடையாளம் தெரி யாத நபர் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து திருடி யிருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள் ளனர்.
ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு
தஞ்சாவூர், ஆக.22 - தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்த சுபபிரியா (23) பேராவூரணி அருகே சாலை விபத்தில் பலியானார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சுபபிரியா 2023 காவல்துறை பிரிவை சேர்ந்தவர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் அருகே கண்ணமுடையார் கோயில் திருவிழா பாதுகாப்பில் இருந்தவர் புதன்கிழமை மாலை பணி முடிந்து ஓய்விற்காக திருமண மண்டபத்திற்கு செல்ல, சக பெண் காவலர்களுடன் ரெட்டவயல் சாலையில் நடந்து சென்றார். அப்போது, மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சின்ன ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்த தண்டாயுதபாணி பின்பக்கமாக மோதியதில், சுபபிரியா கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து தண்டாயுதபாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஓய்வூதியம் கோரி ஊராட்சி செயலர்கள் போராட்டம்
விருதுநகர், ஆக.22- ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை யும் தமிழ்நாடு அரசு இணைக்க வேண்டும் என வலி யுறுத்தி ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கணேச பாண்டியன் தலைமையேற்றார். மாநில துணைத் தலைவர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் கண்ணன், பொருளாளர் அருணாசலம் உட்பட ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்ட னர்.
இராஜபாளையத்தில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மாயம் இளைஞர் கைது
இராஜபாளையம், ஆக.22- இராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த வர் முருகேசன் (40), ஆட்டோ டிரைவர். இவரது இரு சக்கர வாகனத்தை சங்கரன்கோவில் முக்குப்பகுதியில் நிறுத்திவிட்டு ஆட்டோ சவாரி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காண வில்லை. இதையடுத்து தெற்குகாவல் நிலையத்தில் முரு கேசன் புகார் அளித்தார். இதே போல் கோட்டை தலைவாசல் தெருவைச் சேர்ந்த ராசுக்குட்டி (24) என்பவரது இருசக்கர வாகனம் சங்கரன் கோவில் மெயின் ரோடு விநாயகர் கோவில் எதிரே நிறுத்தி யிருந்த வாகனத்தை காணவில்லை. தெற்கு காவல்நிலை யத்தில் ராசுக்குட்டி புகார் அளித்தார். அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதால் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையில் ஆவரம்பட்டியைச் சேர்ந்த காளைப் பாண்டி (29) திருடியது தெரியவந்தது. இரண்டு இரு சக்கர வாகனத்தை மீட்டு காளைப்பாண்டி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இராஜபாளையத்தில் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.1,10,500 திருட்டு
இராஜபாளையம், ஆக.22- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்பந்தபுரம் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாலதி (51). கடந்த 5 ஆண்டு களுக்கு முன் சதீஸ்குமார் என்பவர் கொலையான வழக் கில் நாராயணசாமி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வர். பிணையில் வெளியே வந்தவர் வழக்கிற்காக நீதி மன்றத்தில் ஆஜராகாததால் மீண்டும் கைது செய்யப்பட்டு விருதுநகர் சிறையில் இருந்து வருகிறார். கணவர் இல்லாததால் ஆசிரியர் குடியிருப்பு பகுதி யில் உள்ள தந்தையின் வீட்டில் மாலதி வசித்து வந்தார். கடந்த வாரம் நாராயணசாமி பாஸ்புக் எடுத்துக்கொண்டு வங்கி சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் கார்டு வாயி லாக ரூ.1,10,500 எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீட்டிற்கு வந்து ஏடிஎம் கார்டை தேடி பார்த்த போது திருடு போனது தெரியவந்தது. இதை யடுத்து வடக்கு காவல்நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் இனாம் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (24) என்ப வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசியில் பிரபல கைக்கடிகாரக் கடை மேற்கூரை உடைந்தது
சிவகாசி, ஆக.22- சிவகாசியில் பிரபல கைக்கடிகாரக் கடையின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் பணியாளர்கள் உயிர் தப்பினர். சிவகாசியைச் சேர்ந்த சுரேஷ்( 60 )என்பவருக்கு சொந்தமான பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் கைக் கடிகாரகடை மற்றும் ஷோரூம் வைத்துள்ளார். மேலும் அதே கட்டிடத்தில் கண் கண்ணாடிகளும் வைத்து விற்பனை செய்து வருகிறார். இங்கு 10 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்தநிலையில், பிற்பகல் உணவு இடைவேளையின் போது திடீரென தரைத்தளத்தின் சுண்ணாம்பிலான கட்டிட மேற்கூரை மளமளவென சரிந்தது. உடனடியாக கட்ட டத்தில் இருந்த அனைவரும் லேசான சிராய்ப்பு காயங்களு டன் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினர். தகவ லறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வேறு யாரேனும் கட்டிடத்தி னுள் உள்ளே சிக்கி இருக்கிறார்களா என சோதனை நடத்தி னர்.
சாத்தூரில் பள்ளத்தில் குழந்தையுடன் விழுந்த பெண்
சாத்தூர், ஆக.22- சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறையால் தோண்டப் பட்ட பள்ளத்தில் கைக்குழந்தையுடன் பெண் மற்றும் முதி யவர் பள்ளத்தில் விழும் சிசிடிவி காட்சிகள் இணை யத்தில் பரவி வருகின்றன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினரால், மழை நீர் வடி கால் கட்டி சாலை அகலப்படுத்தும பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனால் சாத்தூர் நகர் பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த சில நாட்க ளாக சாத்தூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதில் சாலையின் ஓரங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடக்கின்றன. இந்த நிலை யில் மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நக ராட்சிக்கு சொந்தமான கடையின் அருகே 3 பெண்கள் கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அங்கே தோண்டியிருந்த பள்ளத்தில் கைக் குழந்தையுடன் ஒரு பெண் தவறி விழுந்து உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக இரு வரையும் மீட்டு உள்ளனர். மேலும் அதே பள்ளத்தில் முதியவர் ஒருவரும் தவறி விழுந்து உள்ளார். இந்த நிலையில் ஒரு பெண் கைக் குழந்தையுடனும், முதியவரும் பள்ளத்தில் விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மேலும், இந்த மாதிரியான விபத்துகளை தவிர்க்க மழைக் காலங்களில் சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக குழிகள் தோண்டப்படும் போது அந்த இடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் மதநல்லிணக்க விழா
சிவகங்கை, ஆக.22- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் இளையோர் நலன் மற்றும் அதிகாரப்படுத்துதல் மையம் சார்பில் மத நல்லிணக்க நாள் விழா மற்றும் மத நல்லிண கட்டுரைத் தொகுப்பு வெளி யீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாங்குடி எம்எல்ஏ. பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவி, மாநக ராட்சி மேயர் முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
சிறுவன் பலி
தேனி, ஆக.22- போடியில் தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்திற்கு உள்ளான தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற கம்பத்தைச் சேர்ந்த சிறு வன் உயிரிழந்தார். இது குறித்து போலுசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.