தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், ஓய்வுபெற்ற நகராட்சி அலுவலரும் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினருமான ஆர்.ஞானசூரியன்- ஜி.நிர்மலா இல்ல திருமண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், காங். மாவட்ட துணைத் தலைவர் சு.ராஜாத்தம்பி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், பி.செந்தில்குமார், எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, விவசாயிகள் சங்கத் தலைவர் முத்துப்பேட்டை முருகையன், சிபிஐ நிர்வாகி சி.பக்கிரிசாமி, நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் ஜெயபாரதி விஸ்வநாதன், எஸ்.ஆர்.ஜவகர் பாபு, சு.பாஸ்கர் மற்றும் சிபிஎம் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மணமக்கள் ஜி.லெனின் - எஸ்.வினோதினி ஆகியோரை வாழ்த்தினர்.