districts

மயிலாடுதுறையில் ஜூன் 7முதல் 22 வரை ஜமாபந்தி

மயிலாடுதுறை, ஜூன் 5-  

     மயிலாடுதுறை மாவட்டத்தில் 1432-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜூன் 7 முதல் 22 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு  வருவாய் வட்டங்களிலும் 1432-ஆம் பசலிக்கான வருவாய்  தீர்வாயம் ஜூன் 7 முதல் 22 வரை நடைபெற உள்ளது.  

    இதன்படி தரங்கம்பாடி வட்டத்திற்கு வருவாய் தீர்வாய  அலுவலராக மாவட்ட ஆட்சியர் ஜூன் 7 முதல் 16 வரை யும், குத்தாலம்  வட்டத்திற்கு வருவாய் தீர்வாய அலுவல ராக, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜூன் 7 முதல் 15 வரை யும், மயிலாடுதுறை வட்டத்திற்கு வருவாய் தீர்வாய அலு வலராக மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் ஜூன்  7 முதல் 15 வரையும், சீர்காழி வட்டத்திற்கு வருவாய் தீர்வாய அலுவலராக சீர்காழி வருவாய் கோட்ட அலுவ லர் ஜூன் 7 முதல் 22 வரையும் நடத்த உள்ளனர்.

    வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்து சமுக இடைவெளி விட்டு வரிசையில் சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை  நேரடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் வழங்க  அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பொதுமக்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்’’ என தெரிவித்துள் ளார்.