districts

img

வேலை வாய்ப்பை உருவாக்காவிட்டால் பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடரும் வாலிபர் சங்க மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார் பேச்சு

திருச்சிராப்பள்ளி, மே 1 - கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பிரச்சார பயணம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை புறநகர், மதுரை மாநகர், திண்டுக்கல் வழியாக திருச்சி மணப்பாறையை வந்தடைந்தது. சைக்கிள் பிரச்சார பயணக்குழுவி னருக்கு சங்கத்தின் புறநகர் மாவட்ட செயலா ளர் நாகராஜ் தலைமையில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர் நடைபெற்ற சைக்கிள் பிரச்சார  பயண பொதுக்கூட்டத்திற்கு சங்க பொருளா ளர் அய்யாவு தலைமை வகித்தார். சங்க  மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார் பேசியதா வது:  ஆண்டிற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என உறுதிய ளித்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு கடந்த  8 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட வேலை வழங்கவில்லை. மேலும் முன்பு இருந்த வேலை வாய்ப்புகளையும் பறித்து விட்டனர்.  அரசு பணியிடங்களை தற்காலிக பணியா ளர்கள் மூலம் நிரப்பி அத்திட்டம் நிறைவே றும் வரை பணிவழங்குவது என்ற அடிப்படை யில் மோடி அரசு செயல்படுவதால் இனி அரசு  ஊழியர்கள் பணியிடமே கிடையாது என்ற சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.

 பொதுமக்களின் பல்வேறு பிரச்சனை களுக்காக போராடிய நிலை மாறி தற்போது அரசு வேலைக்கு கூட போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வேயில் 3 லட்சம் பணியிடங்களும், இதேபோன்று ஒவ் வொரு பொதுத்துறையிலும் பல லட்சம் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப மோடி அரசு தயாராக இல்லை. மோடி  அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை,  பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற தவ றான முடிவுகளால்  நாட்டில் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்கும் விவசாயத்  துறை மற்றும் சிறு,குறு தொழில் நிறுவனங் களும் நலிவடைந்து விட்டன. 1கோடியே 12  லட்சம் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மூடப் பட்டதால் நாட்டில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பை இழந் துள்ளனர். எனவே நாட்டின் இப்போதைய உடனடி தேவை இளைஞர்கள் மற்றும் நாட்டு  மக்களுக்கும் நிரந்தரமான வேலை வாய்ப்பை  உருவாக்குவது. வேலைவாய்பை உருவாக்க வில்லை என்றால் வேலை கேட்டு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் பல்வேறு வடிவங்க ளில் தொடர்ந்து போராடும்.  இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநிலதுணைத்தலைவர்கள் கோபிநாத், பிரியசித்ரா, மாநில செயற்குழு  உறுப்பினர் எட்வின் பிரைட், மாவட்ட செயலா ளர் நாகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து  கொண்டனர். வட்டக்குழு உறுப்பினர் வினோத் குமார் வரவேற்றார். வட்ட துணைசெயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.