districts

கும்பகோணத்தில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பகோணம், ஆக.12-

     கும்பகோணத்தில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

   அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில  நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மழையை  எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு, வியாழன், வெள்ளிக் கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாலை  நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.  

   இதனொரு பகுதியாக கும்பகோணத்தில் வியாழனன்று திடீரென குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், கும்பகோணம் மோதிலால் தெரு, பெரிய கடைவீதி உள்ளிட்ட  தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நீடித்த இந்த மழை, குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்  என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.