திருச்சிராப்பள்ளி, அக்.25 - தமிழக அரசின் சேமிப்பு கிடங்கு களில் உரம், அரிசி உள்ளிட்ட பொருட் களை இருப்பு வைத்து எடுக்காமல், காலியாக வைத்திருப்பதை கைவிட வேண்டும். திருச்சி ரயில்வே குட்ஷெட் டி.என்.டபுள்யூ.சி குடோன் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாத காலங்களாக வேலை வழங்காமல் பட்டினி போடுவதை கைவிட வேண்டும். உடனடியாக உரம் மற்றும் பொது விநியோக அரிசியை கொண்டு வர வேண்டும். சேமிப்பு கிடங்குகளில் அரிசி உரம் சேமிப்பு வைத்து திருச்சி, புதுக் கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்ட ரேசன் கடை களுக்கு அனுப்பி வைக்கும் பணியை உடனே துவங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ரயில்வே குட்ஷெட் மற்றும் டி.என்.டபுள்யூ. குடோன் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது. வியாழனன்று டி.என்.டபிள்யூ.சி குடோன் ஆர்.எம்.அலுவலகம் முன்பு நடந்த இயக்கத்திற்கு குட்செட் சங்க துணை தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சுமைப்பணி சங்கம் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், லாரி செட் சங்க மாவட்டச் செயலாளர் ராமர் ஆகியோர் பேசினர். சங்க செய லாளர் குமார் நன்றி கூறினார். பின்னர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன திருச்சி மண்டல மேலாளரிடம் கொடுத்த மனுவில், “திருச்சி மாவட்டம் மாநகரப் பகுதியில் தஞ்சை சாலை யில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் அரிசி, உரம் ஆகியவை வட மாநிலத்திலிருந்து வர வைக்கப்படும். பின்னர் இவை திருச்சி, புதுக் கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்ட ரேசன் கடை களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பணியில் நூற்றுக்கணக்கான சுமைப் பணி தொழிலாளர்கள் லோடு ஏற்றி, இறக்கி வைத்து பிழைப்பு நடத்து கிறார்கள். குட்செட் தொழிலாளர்கள் 100 பேர் மற்றும் எஸ்.டபிள்யூ.சி குடோன் தொழிலாளர்கள் 56 பேரும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது சுமார் 6 மாதமாக சரியாக லோடு வருவதில்லை. இதனால் தொழிலாளர் களுக்கு வேலை கிடைக்காமல் மிக வும் சிரமப்படுகின்றனர். எனவே சுமைப் பணி தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க, அதிக உரம், அரிசி லோடு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்” என கூறியிருந்தனர்.